Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தென் மாவட்ட பின்னணி கதையில் விக்ராந்த்

ஏ.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் எஸ்.அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வ ரன்  இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர்

விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்தி ரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்து அதே சமயம் குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.

மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.
கலையை தியாகராஜனும், சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் கவனிக் கின்றனர்.

சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு  எஸ். அலெக்சாண்டர் இயக்கம்  வி.பி நாகேஸ்வரன் ஒளிப்பதிவு  மாசாணி. கலை  தியாகராஜன். சண்டை பயிற்சி  ராஜசேகர் நிர்வாக தயாரிப்பாளர் ஏ.வி பழனிச்சாமிடி. சைன்ஸ் ; சசி & சசி மக்கள் தொடர்பு ;A ஜான்

Related posts

Vishal31 Resumed shoot in Hyderabad

Jai Chandran

EtharkkumThunindhavan wishes Happy New Year!

Jai Chandran

விஷ்ணு விஷாலின் “ஆர்யன்” பட முன் வெளியீட்டு விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend