Trending Cinemas Now
Uncategorized

பேட்ட பட விவகாரம்: தயாரிப்பாளர் மீது போலீசில் மோசடி புகார்

மலேசியாவில் இயங்கி வரும் தனது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) என்கிற நிறுவனம் வாயிலாக தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தான் வெளியிட்டது.

இவரது நிறுவனத்தை அணுகி, ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-3’ மற்றும் தனுஷின் ‘நான் ருத்ரன்’ ஆகிய மூன்று படங்களுக்கான பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி அவர்களை நம்பவைத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி, அவற்றை தருவதாக கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து கோடிகளில் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்று தெரியவந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது,  சில  கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்தாராம்.

அதன்பின்னர் ‘காஞ்சனா-3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ ஆகிய படங்களின் பதிப்புரிமையும் அவரிடம் இல்லை என்று கூறப்படுகிறது.  இதையடுத்து மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்,  சென்னை மூலம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி   தற்போது போலீஸ் வழக்கு பதிவு செய்ள்ளது.

Related posts

Nandini Karky launches online course for subtitling

Jai Chandran

கிளாஸ்மேட் (பட விமர்சனம்)

Jai Chandran

tmja kavitha diwali malar 2025

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend