திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலினை இன்று சந்தித்தார். அப்போது, கனடாவை சேர்ந்த ஹாலிவுட் ஒளிப்பதிவா ளரான சுரேஷ் ரோஹின் ஏற்பாட்டில் அனுப்பி வைத்திருந்த ஒரு கோடி இருபது இலட்சங்கள் மதிப்பிலான 14 Portable Ventilator கருவிகளை அரசு மருத்துவமனை களுக்கு பிரித்து வழங்கும் பொருட்டு உதயநிதி ஸ்டாலினிடம் தங்கர் பச்சான் ஒப்படைத்தார்.
அண்மையில் கடலூர் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் தட்டுப்பாட்டின் காரணமாக உயிரிழந்த கொரோனா நோயாளியின் சம்பவத்தை கனடா நண்பருடன் பகிர்ந்து கொண்டதனால் அவர் இந்தக் கருவிகளை வாங்கி அனுப்பி வைத்ததாக தங்கர் பச்சான் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகிநீடு அவர்களும் உடன் இருந்தார்.
