தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்
சென்னை ஏப்:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்படுகிறது. கொரோனா தொற்று மாநிலத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. கொரொனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, நோயின் தாக்கத்தைப் பொறுத்தும், மருத்துவக்குழு தரும் அறிக்கையை பொறுத்துமே தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பது பற்றி முடிவு.செய்யப்படும். தமிழகத்தில் கொரொனா 2ம் கட்டத்தில் இருந்தாலும்
3வது கட்டத்திற்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது.
அதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
#Will Tamil Nadu end or extend lockdown? CM Answer