தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவை ஏப்ரல் 13 ல் சந்தித்து சித்திரை திருநாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம். மாபெரும் வெற்றி பெற்ற விடுதலை படத்துக்கு வாழ்த்து தெரிவித்தோம். அப்போது இசைஞானியிடம் வருடத்திற்கு ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் என்று சங்க தலைவி கவிதா எஸ் கேட்க அதற்கு பதில் அளித்த இளையராஜா ” அவசியம் சந்திப்போம்” என்று அவரும் சிரித்த முகத்துடன் நம் கோரிக்கையை ஏற்றார்.
இளையராஜாவுக்கு அன்பு பரிசாக முருகன் சிலையும், ரமணர் ஓவியமும், அவர் பெயரில் அர்ச்சனை செய்த வடபழநி கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

மறக்க முடியாத சந்திப்பாக அமைந்த இந்நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த டைமண்ட் பாபு இசைஞானி மேனேஜர் ஶ்ரீராம்சார் ஆகியோருக்கு சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப் பட்டது.

