’மண்ணுக்கு மரம் பாரமா..’ பாடல் எழுதிய பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி (வயது 97 ) இன்று மரணம் அடைந்தார். வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலம் பாதிக் கப்பட்டி ருந்த அவர் வீட்டிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்ற வந்தார், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பி.கே. முத்துசாமி மறைவுக்கு திரையுல கினர் பலரும் இரங்கல் தெரிவித்துள் ளனர்.
1958ம் ஆண்டு வெளியான ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தில் இடம்பெற்ற ’மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா, கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா என்ற பாடல் வரிகளில் காலத்தை வென்ற பாடலாக நிற்கிறது.
பி.கே முத்துசாமி. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப் பட்டியைச் சேர்ந்தவர் வெண்பா கவிஞர் என்றும் இவர் அழைக்கப்பட்டார்.
காவிரியின் கணவன்’ என்ற படத்தில் எழுதிய `சின்ன சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து’, `பொன்னித் திருநாள்’ படத்தில் `கண்ணும் கண்ணும் கதை பேசி, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து’ போன்ற பல பல்வேறு பாடல் கள் எழுதியுள்ளார். .
