Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவிஞர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி

கவிஞரும், திரைப்பட பாடலாசிரிய ருமான கபிலனின் மகள் தூரிகை (வயது 28) . இவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்றில் தூரிகை கட்டுரைகள் எழுதிவந்ததுடன் “பீயிங் வுமன்” (Being Women) என்னும் இணைய இதழையும் நடத்தி வந்தார்.
இதுதவிர காஸ்ட்டியூம் டிசைனிங் படிப்பும் முடித்திருந்தார். பல்வேறு படங்களில் காஸ்ட்டியூம் டிசைன ராகவும் பணியாற்றி வந்தார்.
வீட்டில் திருமணம் செய்யச் சொல்லி தூரிகையிடம் சொல்லிவந்ததால் அது பிடிக்கமல் தூரிகை த்ற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கவிஞர் கபிலன் மகள் தூரிகை மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில், புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரி யரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன்” என குறிபிட்டி ருக்கிறார்.

Related posts

சொர்ணம் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி இரங்கல்

Jai Chandran

ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ப்ரீ லுக்

Jai Chandran

SYMPHONY OF EMOTIONS for “Navarasa”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend