Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இனி பட்டம் வேண்டாம்: கமல்ஹாசன் திடீர் முடிவு

உலகநாயகன் கமலஹாசன் தனக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் வழங்கிய பட்டத்தை துறந்திருக்கிறார். எதற்காக அவர் திடீரென்று இப்படி ஒரு முடிவு எடுத்தார், அதற்கு என்னகாரணம் என்று யாரும்  ஆராய்ச்சிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக கமல்ஹாசனே அதற்கான விளக்கத்தையும் அடித்திருக்கிறார்.  இனிமேல் என்னை உலக நாயகன் என்றோ வேறு பட்டப்பெயர் வைத்தோ அழைக்க வேண்டாம் என்னை நான் இப்போது குறிப்பிடுவது போல் அழைத்தால் மட்டும் போதும் என அவர் கூறியிருக்கிறார். கமலஹாசனை இனி எப்படி அழைக்க வேண்டும் என்பதை அவர் அறிக்கையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இதோ கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு

சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. கொண்டு

அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது. எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்

இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்

இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கமலஹாசன் அறிக்கையில் கூறியிருக்கிறார்

Related posts

கடைசி உலகப் போர் (பட விமர்சனம்)

Jai Chandran

பிரபாஸ்-கே ஜி எப் பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’ ஹொம்பாளே பிலிம்ஸ் பிரம்மாண்ட படைப்பு

Jai Chandran

அந்தரன்  (பட விமர்சனம் )

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend