காவல்துறை படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன்..
டைரக்டர் ஹரி..
சாத்தான்குளத்தில் தந்தை மகனை போலீசார் அடித்து கொன்றதற்கு சிங்கம் பட இயக்குனர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது :
சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்து விடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது.
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்.
இவ்வாறு திரைப்பட இயக்குனர் ஹரி கூறி உள்ளார்.