14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதுவரை 15-தொடர் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன இந்நிலையில் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்கஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை 4 போட்டிகளில் சென்னை அணி பங்கேற்றது. இதில் 4 ஆட்டங்களில் ஒரு தோல்வி 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது. 3 வெற்றி 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடி 2-வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆம் இடத்தில் உள்ளது.

நேற்று மும்பை வன்கடே மைதனத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் என்ற ப்ரிய இலக்கை அடைந்தது.. 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை எட்டும் நோக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. கடுமையா ம்நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் 3 வெற்றியை ரசிகர்கள் நெட்டில் கொண்டாடி வருகின்றனர்.