பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார் நடிகை மீரா மிதுன். இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கேரளாவிலிருந்து வீடியோ வெளியிட்ட மீரா மிதுனை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மீரா மிதுன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தன்னை போலீசார் உணவு தராமல் பட்டினி போட்டு டார்ச்சர் செய்ததாக கூறி கதறி அழுத்தார் மீர மிதுன்.
மீரா மிதுன் வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

