இந்தி நடிகர் சஞ்சய்தத் மூச்சு திணறல் காரணமாக மும்பை மருத்துவமனையில் கடந்தவாரம் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு நுரையீரலில் புற்று நோய் 3வது கட்டத்தில் இருப்பது தெரியவந்தது.
புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று மும்பையில் உள்ள கோகிலா பென் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சேர்ந்தார் சஞ்சய். மருத்துவமனை புறப்படுவதற்கு முன்ன்னதாக ’எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என மெசேஜ் பகிர்ந்தார்.
கொரோனா ஊரடங்கால் துபாயில் சிக்கிக்கொண்ட சஞ்சய்தத் மனைவி மான்யதா தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டு வந்து கணவருடன் மருத்துவமனைக்கு சென்றார்.
,
