சினிமாவில் எல்லாமே நடிப்புதான் சி;ல சமயம் நிஜமாக மாறும். அப்படித்தான் ஏலே படத்தில் சோக காட்சியில் நடித்த சமுத்திரக்கனியை மூதாட்டி அடித்து அழுத ருசிகரம் நடந்தது. கிராமத்தில் சைக்கிளில் சென்று குச்சி ஐஸ் விற்கும் வியாபாரியாக ஏலே படத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி. இப்படம் வரும் 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது இதையொட்டி சென்னை பிரசாத் லேபில் நேற்று படத்தின் பத்திரிகை, மீடியா சந்திப்பு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் .ஷுட்டிங்கில் நடந்த சம்பவம் பற்றி சமுத்திரக்கனி கூறியதாவது:
ஏலே படத்தில் நடிக்க ஒப்ப்புக்கொண்டு படப்பிடிப்பு முதல் நாள் சென்றபோது பிணமாக நடிக்க வேண்டும் என்றார்கள். என்னய்யா முதல் நாளே இப்படி காட்சி வச்சிருக்காங்க என்று எண்ணிக் கொண்டு பிணமாக நடிக்க அங்கிருந்த கட்டிலில் கண்ணை மூடிக்கொண்டு படுத்துக்கொண்டே ஒரு சில நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஊர்காரர்கள் நான் படுத்திருக்கும் கட்டிலை சுற்றி அமர்ந்து அழுவார். ஒரு மூதாட்டி என்னை நெஞ்சில் அடித்து அடித்து அழுத்தார். வலி தாங்க முடியவில்லை கண்ணை திறந்து ’ஆத்தா மெதுவா பண்ணுங்க’ என்று சொன்னேன் சில நாட்களுக்கு முன்புதான் அந்தம்மாவின் மகன் இறந்துவிட்டாராம் அந்த சோகத்தை நெஞ்சில் வைத்து நிஜமாகவே நடித்துவிட்டார்.
ஏலே கதையை ஹலிதா 9 வருடத்துக்கு முன் என்னிடம் சொன்னார். பிறகு 3 வருடத்துக்கு முன்பு மறுபடியும் சொன்னார். மீண்டும் என்னை அணுகி ஏலே படம் தயாராக உள்ளது. புஷ்கர் காயத்ரி,ஒய்நாட், ரிலையன்ஸ் போன்றவர்கள் இணைந்து தயாரிக்கின்றனர். நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். நடிப்பது என்பது முடிவாகிவிட்டதால் மீண்டும் ஏலே கதையை சொல்லச் சொன்னேன். எதார்த்தமான கதை.
ஹலிதா எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். ஆனால் படப்பிடிப்பில் அவர் வேறுமாதிரி இருப்பார். ஒரு இடத்தில் நிற்கமாட்டர். பிடிவாதம் அதிகம் இந்த காட்சி வேண்டும் என்றால் அதைஎடுத்தே தீர்வார். அங்கு ஒரு இயக்குனராக சாமி ஆடுவார். அதுவும் சிரித்தபடி சாமி ஆடிவிடுவார். பள்ளிக்கூட பெண்ணாக சிறுமியாக பார்த்த ஹலிதா இன்றைக்கு இப்படி வளர்ந்து நிற்கிறார். ஆனால் இதுவல்ல அவரது உயரம் இன்னும் பெரிய இடத்துக்கு வருவார். இதில் என் மகனாக நடித்திருக்கும் மணிகண்டன் நல்ல நடிப்பு திறமை கொண்டவர். பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.
இயக்குனர் ஹலிதா சமீம் ஏற்கனவே பூவரசம் பீப்பீ, சில்லு கருப்பட்டி படங்களை இயக்கியவர். ஏலே படத்தை இயக்கி உள்ளார். அவர் பேசியதாவது:
நான் முதலில் இயக்குவதற்காக எழுதிய ஸ்கிர்ப்ட். ஏலே. ஆனால் பூவராம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி இயக்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏலே படத்தின் கதையை புஷ்கர் காயத்ரியிடம் கூறி இருந்தேன் அவர்கள் தயாரிப்பதாக கூறி இருந்தார்கள் அது இப்போது நடந்திருக்கிறது.
சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி உள்ளிட்ட எல்லோரு மே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கி றார்கள். இசையும் பாடல் களும் பொருத்தாக அமைந்தது. ஏற்கனவே இந்த படத்தை நான் எடிட் செய்திருந்தேன். மேலும் 20 நிமிடம் குறைக்க ரேமண்ட்டிடம் கொடுத்தேன். அவர் அதனை நன்றாகவே செய்து முடித்தார்.
தயாரிப்பாளர்கள் புஷ்கர் காயத்ரி பேசியதாவது:முதன்முறையாக எங்களது வால் வாட்சர்ஸ் பட நிறுவனம் மூலமாக தயாரிக்கும் படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என்று ஏலே ஸ்கிர்ப்ட்டை தேர்வு செய்தோம், இந்த கதையை இயக்குனர் ஹலிதா சொல்லியிருந்தார். அதை தயாரிக்கும் நேரம் இப்போது வந்தது. ஒய் நாட், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் தயாரிப்பில் உறுதுணையாக இருந்தார்கள்.
மேலும் நடிகர் மணிகண்டன், ஒளிப்பதிவார் தேனி ஈஸ்வர், எடிட்டர் ரைமண்ட். இசை அமைப்பாளர் அருள்தேவ், பாடகர்கள் சித்திரை சேனன், கடல் வேந்தன், யோகி சேகர், பாடகி ரோஜா ஆதித்யா ஆகியோர் பேசினார்கள். பட ஹிரோயின் மதுமதி இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண். அவரும் மற்றொரு இசை அமைப்பாளர் காபெர் வாசு ஆகியோர் வீடியோவில் தங்களது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டனர். அனைவரையும் பி ஆர் ஓ சுரேஷ் சந்திரா, நாசர், ரேகா வரவேற்றனர்.
ஏலே [படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) நிறுவனமும் ரிலையன்ஸ் எண்டர்டெயின் மெண்ட் (Reliance Entertainment) நிறுவனமும் இணைந்து வழங்குகிறது. எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை இணை தயாரிப்பு செய்துள்ளார் சக்ரவர்த்தி ராமசந்திரா. படைப்பாளிகள் புஷ்கர் & காயத்திரி ( விக்ரம் வேதா புகழ் ) Wallwatcher Films சார்பில் முதல் படைப்பாக இப்படத் தினை கிரியேட்டிவ் புரடக்சன் செய்துள்ளனர்.