..
குடும்பத்தை பிரித்துப்போட்ட கொரோனா
கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக் கிறது. அடுத்து 21 நாட்களுக்கு அவரவர்கள் தங்கள் வீட்டில் தனிமையில் தங்கி இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின் றனர்.
நடிகர் கமல்ஹாசன் குடும்பம் மற்றொரு முடிவை எடுத் துள்ளது. தங்கள் மூவரையும் தனித்தனி வீடுகளில் தனிமை படுத்த முடிவு செய்தனர். அதன்படி கமல், அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இளைய மகள் அக்ஷ்ரா ஹாசன் ஆகியோர் ஒவ்வொருவரும் தனித்தனியாக மூன்று வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.
கமலின் மாஜி மனைவி சரிகா மும்பை வீட்டில் தனிமையில் இருக்கிறார்.
இதுபற்றி ஸ்ருதிஹாசன் கூறும் போது, ‘லண்டனிலிருந்து திரும்பியவுடன் தனி வீட்டில் வசிக்கிறேன். என்னுடன் எனது செல்ல பூனைக் குட்டி கிளாரா தவிர வேறு யாரும் கிடையாது’ என்றார்.
#Coronavirus Pandemic: Kamal Haasan, Sarika, Shruti and Akshara self isolate in different houses
