கொரோனா ஊரடங்கு தளர் வில் தனது உடல் எடையை குறைப்பதில் தீவிர கவனம் செலுத்திய சிம்பு புதிய படங்களில் நடிக்க ஸ்கிரிப்ட்டும் கேட் டார். இயக்குனர் சுசீந்திரன் சொன்ன கிராமத்து பின்னணி யிலான ஸ்கிரிப்ட் பிடிக்கவே உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். திண்டுக்கல் பகுதி கிராமத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. சிம்பு படப் பிடிப்பில் கலந்து கொண்டார். ஷூட்டிங் வேகமாக நடக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்ட சுசீந்திரன் படத்திற்கு ஈஸ்வரன் என பெயரிட்டிருப்பதையும் அறிவித்திருக்கிறார். வயலில் நாகப் பாம்பை கையில் பிடித்தபடி சிம்பு அளித்திருக்கும் போஸ் உடன் படத்தின் பெயரும் ஈஸ்வரன் என அறிவித்திருக்கிறார் சுசீந்திரன், பொங்கல் தினத்தில் படம் வெளியாக உள்ளது.இப்படத்தையடுத்து மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
,
