ஒன்றிணைவோம் வென்றிடுவோம்..
கேப்டன் விஜயகாந்த் அறிக்கை..
ஒன்றிணைவோம் வென்றிடுவோம் என்று கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே மு தி க தலைவர் விஜயகாந்த் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஊரடங்கு அமுலுக்கு வந்து ஒரு மாதம் முடிந்து மே 3ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டு உள்ள இந்த காலகட்டத்தில் மக்களி டையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே அவரவர் முகத்தில் முக கவசம் அணிந்து மொபைல் போனில் செல்பி படம் எடுத்து அதை டிபியாக பதிவிட்டும், சமூக வலை தளங்களில் வாட்ஸ் அப், டிபி, ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் பதிவிட்டு முக கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் என தமிழக மக்களையும் தேமுதிக தொண்டர்களை யும் கேட்டுக்கொள்கிறேன் மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே 3ஆம் தேதி வரை அவரவர்கள் மொபைலில் டிபியாக வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.ஒன்றிணை வோம் வென்றிடுவோம்.
இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
#dmdk President Vijyakhanth Latest Statement
#விஜயகாந்த் #தேமுதிக