Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

5 ஆயிரம் குடும்பத்துக்கு தயாரிப்பாளர் உதவி

5 ஆயிரம் ஏழை குடும்பத்துக்கு தயாரிப்பாளர் உதவி

தலா ஒரு மாதத்துக்கு மளிகை சாமான் வழங்கினார்

ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்துள் ளவர் எஸ். தணிகைவேல். இவர்

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் சார்பில் நேற்று இன்று, இரவும் பகலும் வரும். போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வெளியிட்டவர். எஸ். தணிகைவேல். இவர் ஒற்றைப் பனைமரம் என்ற படத்தையும் தயாரித்து வெளியிட்டி ருக்கிறார். இந்தியா முழுவதும்
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க 144 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் வேலை யிழந்து ஏழை வருமானம் இல்லாமல் இருப்பதுடன் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடு கின்றனர். இந்நிலையில் 5000 ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கினார் தணிகைவேல்.

திருவண்ணாமலை  நகரில் தியாகி அண்ணாமலை நகர்,  கீழ்நாத்தூர், பெரியார் நகர், அண்ணாநகர், சின்னக்கடை தெரு கட்டிட தொழிலா ளர்கள் குடியிருப்பு பகுதி, கள் நகர்,  வேங்கிக் கால், மற்றும் திருவண்ணா மலை அருகில் உள்ள  பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு எஸ் தணிகைவேல் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தையும் வழங்க முன்வந்தார்.
நீர்த்துளி இயக்கத்தினர்
வீடு வீடாக இந்த இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு உதவியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று 1500 குடும்பங்களுக்கு இந்த இலவச ரேஷன் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளில் அளிக்கப்பட்டது.

#Ottrai pPanaimaram Producer Helping Hand for 5000 poor

Related posts

ஏ லெஜன்ட் (விஜயபுரி வீரன்) (பட விமர்சனம்)

Jai Chandran

AadhalinaalKaadhalSeiveer, HeyNanba Song Teaser

Jai Chandran

One Month of Criminalcrush

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend