தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பா ளர்கள் சங்க தலைவர் மற்றும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தலைவருமான டி.ராஜேந்தர் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தி:
எனது இனிய நண்பரும், இன் தமிழ் பற்றாளரும், பட்டை தீட்டிய வைரம் போல் வரிகளை தீட்டி பாடலில் தனக்கென்று முத்திரை பதித்த பாடலாசிரியருமான பிறைசூடன் இயற்கை எய்தினார் என்ற செய்தி என்னை பெரிதும் தாக்கியது.
அன்னாரை இழந்து வாடும் தமிழ் திரையுலகித்திற்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
