தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சித்தூர் மாவட்டத்திற்கு வழங்கிய பள்ளி பாடபுத்தகங்கள் நகரியில் உள்ள தமிழக மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தமிழக பாடநூல் நிறுவன தலைவர் லியோனி, திருத்தனி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா செல்வமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக அங்குள்ள அறிஞர் அண்ணாவின் திருஉருவசிலைக்கு மூவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
