திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா
பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்,சீக்கிரம் திருப்பி வர இறைவனை வேண்டுவதாக ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
தனது டிவிட்டரில் ரஜினி வெளியிட்டு ள்ள வீடியோ வில் கூறியிருப்பதாவது:
50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி, கோடி கோடி மக்களை மகிழ்வித்த மதிப்புக்குரிய எஸ்.பி.பி அவர்கள் உடல்நலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று அபாயக் கட்டத் தைத் தாண்டிவிட்டார் என்று கேள்விப் பட்டதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டு மென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.