2 வருடங்களுக்கு முன் அரசியலில் ஈடுபடுவதாக முடிவெடுத்து ரஜினிகாந்த தனது நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார்.. கடந்த ஆண்டு அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவர் உடல்நிலை கருதி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நேற்று சென்னை திரும்பினார். இன்று அவர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு பழையபடி ரஜினிகாந்த் நற்பணி மன்றமாகவே செயல்படும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

