இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத். இவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அரண்மனை யில் பதற்றம் நிலவியது. மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் குழு மகாராணிக்கு சிகிச்சை அளித்தனர். தீவிர , சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று காலமானார்.. அவருக்கு வயது 96.
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு தகவல் வெளியானதும் மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக தலைவர்கள், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
மகாராணி எலிசெபத் இறந்தநிலையில் அரண்மனை அருகே வானத்தில் இரட்டை வானவில் தோன்றியது. அதை அங்கு திரண்டிருந்த மக்கள் ஆச்ச்ர்யமுடன் பார்த்து வியந்தனர்.
