Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ படத்தில் தபுவின் கேரக்டர் கிளிம்ப்ஸ்..

விஜய்விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா ‘ஸ்லம் டாக்: 33 டெம்பில் ரோடு.

இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் – உண்மையான உணர்ச்சிகள் – அதிரடியான சண்டைக் காட்சிகள்-  புதிரான மர்மம்-  ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது.

கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்… ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான உலகத்தை நிலை நிறுத்த தொடங்கி, பின்னர் தபுவை ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்துகிறது. அவர் ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து.. உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். ஒரு உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும்… அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த ‘பளார்’ என்ற அறையும்… கௌரி ஹெக்டே அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல… அதை கோருபவள் என்பதை உடனடியாக பிரதிபலிக்கிறது.

அந்த கதாபாத்திரம் – ஒரு சக்தி வாய்ந்த அதிகாரியாக மட்டுமல்லாமல் முற்றிலும் அச்சம் ஏதும் இல்லாத மற்றும் சமரசம் ஏதும் இல்லாத ஒருவராகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். கௌரி ஹெக்டே – தெருக்களின் நடுவில் விரோத மனப்பான்மை கொண்ட உள்ளூர் மக்களையும், ரவுடிகளையும் எதிர்கொள்கிறார். அவர்களை உடல் ரீதியாக தாக்கி சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஒரு மரத்தடியை பயன்படுத்துகிறார். காவல்துறையினரும், கூட்டமும் அவரை சூழ்ந்து இருந்தாலும்… அவர் சற்றும் கலங்காமல் தனது அதிகாரத்தை எதிர்ப்பவர்களை ஆக்ரோஷமாக அடக்குகிறார்.

அந்தக் காட்சி முழுவதும் மின்னும் ‘ஒரு அச்சமற்ற பெண்’, ‘சக்தி வாய்ந்த அதிகாரி’, ‘இரக்கமற்றவர் ‘, ‘கருணையற்றவர்’, ‘துறையின் பிசாசு’ போன்ற வார்த்தைகள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகின்றன. இறுதியில் அவர் தன்னை முழு அதிகாரத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது தான் இதன் உச்சக்கட்டம் வெளிப்படுகிறது. ‘கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை’ எனும் அந்த அறிமுகம்… ஒரு மிகச்சிறந்த பூரி ஜெகன்நாத் பிரத்யேகமாக வடிவமைக்கும் கதாபாத்திரத்திற்கே உரிய வீரியத்தையும், கம்பீரத்தையும் கொண்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

தபு கம்பீரமாகவும், மிடுக்காகவும் தோன்றுகிறார். தனது திரை தோற்றத்தில் அந்த கதாபாத்திரத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்கிறார். அவர் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தையும், அச்சுறுத்தலையும் கொண்டு வருகிறார். இது அந்த கதாபாத்திரத்தை உடனடியாக காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக மாற்றுகிறது. பூரி ஜெகன்நாத் – மறக்க முடியாத கதாபாத்திரங்களை வடிவமைத்து அவற்றை தாக்கத்தை ஏற்படுத்து வகையில் அறிமுகப்படுத்துவதில் எப்போதுமே ஒரு தனித்துவமான திறமை கொண்டவர். மேலும் கௌரி ஹெக்டே-  அவரின் மற்றொரு வசீகரிக்கும் புதிய வரவாக தோன்றுகிறார்.

இந்த படத்திற்கான நடிகர் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சம்யுக்தா நாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லனாக நடிக்கிறார். பிரம்ஹாஜீ மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.‌

இப்படத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான கதைக் களத்திற்கு ( Dark & Gritty World) தொழில்நுட்பக் குழுவினர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்.  சாம் கே. நாயுடு ஒளிப்பதிவையும், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைப்பையும், சந்தோஷ் நூஜில்லா படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.

‘ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர், ஜே பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜே பி நாராயண ராவ் கொண்ட்ரோல்லாவுடன் இணைந்து தயாரிக்கின்றனர்.

டைட்டில் லுக்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்-  டீசர் – தற்போது வெளியாகி கவனம் ஈர்க்கக்கூடிய கிளிம்ப்ஸ்- ஆகியவற்றின் மூலம் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உலகம் குறித்த ஆர்வத்தை இவை மேலும் தூண்டுகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியாக தயாராகி வருகிறது.

நடிகர்கள் :

விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்,பிரம்ஹாஜீ,விடிவி கணேஷ் .

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத் – சார்மி கவுர் & ஜே பி நாராயணன் ராவ் கொண்ட்ரோல்லா
வழங்குபவர் : சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம்: பூரி கனெக்ட்ஸ்
CEO :  விஷ்ணு ரெட்டி
இசை:  ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
ஒளிப்பதிவு : சாம் கே. நாயுடு
படத்தொகுப்பு : சந்தோஷ் நூஜில்லா
VFX : அனில் பாடூரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

Related posts

வணங்கான் பட விமர்சனம்

Jai Chandran

கபிலனின் குற்றப்பரம்பரை அரசியல் காப்பியம் வெளியீடு

Jai Chandran

Puneeth Rajkumar’s “Dvitva’ welcomed Trisha on board

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend