Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உடும்பை வன அதிகாரிகளிடம் ஒப்படைத்த உஷா ராஜேந்தர்

பிரபல பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் மனைவியும், சிலம்பரசன் டி.ஆர்  தாயுமான உஷா ராஜேந்தரின் டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது.

கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஒரு உடும்பு அந்த இடத்தில் பதுங்கி இருப்பதை கண்ட பணியாளர்கள் தயாரிப்பாளர் உஷா ராஜேந்தரிடம் உடனே தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த அவர் உடும்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார்.

மதுரவாயல் காவல் நிலையத்தை அணுகி உடும்பு இருப்பதாக கூறியதும், வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு உடனே விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பாதுகாப்பாக அந்த உடும்பை எடுத்து சென்றனர்.

தாய்மை குணத்துடன் உடும்பின் நிலை கண்டு உடனே தகவல் தெரிவித்த உஷா ராஜேந்தருக்கு காவல் துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related posts

‘Emirates’ honour for actor Nasser

Jai Chandran

சூரரைப்போற்று பாடல் 2

Jai Chandran

ரோஜா எம் எல் ஏ கோரிக்கை மனு மீது மத்திய அரசு நடவடிக்கை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend