Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘கலியுகம்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமை யாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் திரைப்படம் ‘கலியுகம்’. இதனை இயக்குநர் ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்டபார்வை’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு, பிரம்மாண் டமான பட்ஜெட்டில் கலை நயத்துடன் உருவாக்கப் பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கி யிருக்கிறது.

போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் ‘கலியுகம்’, திறமையான இளைய தலைமுறை கலைஞர் களால் உருவாக்கப்பட்டு வருவதாலும், ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும் போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related posts

சத்யராஜின் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் ஆக 16 முதல் பார்க்கலாம்

Jai Chandran

OM VIJAY DIRECTORIAL “VELLIMALAI” TEASER REVEALED

Jai Chandran

கவினின் ஸ்டார் படத்துக்கு தியேட்டர் அதிகரிப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend