Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துபாய் எக்ஸ்போவில் ஜோதிகா. நடித்த காற்றின் மொழி திரையீடு

உலகின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி அக்டோபர் 1* அன்று துபாயில் திறக்கப்பட்டது . 2021 மற்றும் மார்ச் 2022 வரை தொடரவுள்ளது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கின்றன. இந்தியா தனது தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், சேவைத் துறை மற்றும் பிற துறைகளை விளம்பரப்படுத்தும் இந்நிகழ்வில் கலாச்சாரம் & சினிமா உட்பட பெரிய அளவில் பங்கேற்பு செய்கிறது.

இந்தியா சார்பிலானா ஒரு வீடியோ ஷோ ரீலை இந்த இணைப்பில் பார்க்கலாம்
இணைப்பு இங்கே https://www.voutube.com/watch?y=ToluftPa1kM

நமது நாட்டு சினிமாவை விளம்பரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக FICCI FLO பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படத்தை திரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா 2022 ஜனவரி 18 மற்றும் 19 தேதிகளில் இந்தியா பெவிலியன் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. இத்திருவிழாவை partners of FICCI FLO நிறுவனத்தின் அறிவு சார் பங்குதாரரான, Whistling Woods International (WWI) நிறுவனம் நடத்துகிறது.

துபாய் எக்ஸ்போவில் திருவிழாவின் போது உங்கள் ‘காற்றின் மொழி’ திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
உஜ்வாலா சிங்கானியா
தலைவர், FICCI FLO

சுபாஷ் காய்
தலைவர், WWI

Related posts

சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்

Jai Chandran

விஜய் தேவரகொண்டாவுக்காக வாய்ஸ் தந்த சூர்யா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend