Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மணற்சிற்பத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்தார்

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை’ எனும் பெயரில் காவல் துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங் களும், கல்லூரி மாணவி களும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ் வில் போதை பொருளுக்கு எதிரான ‘எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’ எனும் விழிப்புணர்வு வாசகத்தை கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து முழங் கினர்.

மேலும் போதை பொரு ளுக்கு எதிராக பொதுமக் களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை சென்னை மாநகராட்சியின் உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளரான ராதா கிருஷ்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதன் போது சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் கூடுதல் ஆணையர் . லோகநாதன், சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் ஆர். வி. ரம்யா பாரதி, சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் திருமதி. திஷா மிட்டல், சென்னை கிழக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர்  ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் மாவட்டத்தின் இணை ஆணையர்  சகாதேவன், மயிலாப்பூர் காவல்துறை உதவி ஆணையர்  பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். இவர் களுடன் கல்லூரி மாணவிகள் போதை பொருளுக்கு எதிராக பாடல்கள் , மைம் எனப் படும் கலை வடிவம், சிறு நாடகம் போன்றவற்றின் மூலமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சியும் நடை பெற்றது.

இந்நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில் , ”
இங்கு கூடியிருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தங்களது வாழ்க்கையை ஆரோக்கியமான முறை யில் சந்தோஷமாக ‌ செலவழித்து வருகிறீர்கள் என நம்புகிறேன். ஆனால் இந்த சமூகத்தில் போதை பொருளுக்கு அடிமையான வர்கள் அதிகரித்து வருகிறார்கள். உங்களு டைய நண்பர்களோ அல்லது தோழிகளோ யாரேனும் போதை பொரு ளுக்கு அடிமையாக இருந் தால், அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்து அவர்களை இதிலிருந்து மீட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை போதை பொருளுக்கு அடிமையா காமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் உங்களிடம் இருக்கிறது. மேலும் போதை பொருளை பயன் படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகத்தை அனைவரும் ஒன்றிணைந்து கூறுவோம் ‘எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’. போதை பொருளை பயன்படுத் தாமல்.. போதை பொரு ளுக்கு எதிரான விழிப்புணர்வில் முழுமை யாக ஈடுபட்டு சமூக நலனை காப்போம்.” என்றார்.

Related posts

சூர்யா- பாலா இணையவிருந்த வணங்கான் கைவிடப்பட்டது

Jai Chandran

‘மேதகு-2’ படம் ‘மூவி வுட்’ ஒடிடி தளத்தில் வெளியானது..

Jai Chandran

சுந்தர்.சி., அனுராக் இணையும் “ஒன் 2 ஒன்” பர்ஸ்ட் லுக்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend