Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

5 மாதத்துக்கு பின் ஷுட்டிங் : அரசு அனுமதி வழங்கியது

கொரோனா தொற்று எல்லாத் துறையையும் புரட்டி போட்டிருக்கிறது. குறிப்பாக ஊராடங்கு தொடங்கிய திலிருந்தே சினிமா துறை முடங்கியது. படப்பிடிப்புகள். தியேட்டர்கள் என எந்த பணியும் நடக்கவில்லை . நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தொடங்கி சினிமா தொழிலா ளர்கள் வரை எல்லோரும் வேலை இழந் தனர்.
சினிமா ஷூட்டிங் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கத்தின் சார்பில் டைரக்டர் படப்பிடிப்புக ளுக்கு கட்டுப்பாடு களுடன் அனுமதி வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில். ’சினிமா படப்பிடிப்புகள் 75 பேர்களுடன் கொரோனா கட்டுபாடுகள் கடைபிடித்து நடத்திக்கொள்ளலாம். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. சினிமா தியேட்டர் திறப்புக்கு அனுமதி தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக்  கூறி உள்ளார். நீண்ட நாட்களுக்கு ஷூட்டிங் பணிகள் தொடங்குவதால் படக்குழுவினர் வேகமாக வேலையில் இறங்கி உள்ளனர். ஏற்கனவே டிவி படப்பிடிப்புக்கு மற்றும் பிந்தைய பணிகளுக்கும் அனுமதி தரப்பட்டது.

Related posts

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ மார்ச் 21ல் ரிலீஸ்

Jai Chandran

அதர்வாவின் “டிரிக்கர்” பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அதிக வரவேற்பு

Jai Chandran

சினிமா பணிகள் அனைத்தும் நிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் முடிவு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend