Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பரத நாட்டியம் ஆடியபடி ஓவியம் வரையும் மாணவி

பரத நாட்டியம் ஆடிக்கொண்டே ஓவியம் வரைந்து அசத்தும் கல்லூரி மாணவி மேக்னா உன்னி கிருஷ்ணன்.

சென்னையில் காட்சி தொடர்பியல் பிரிவில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா உன்னிகிருஷ் ணன். இவரது பரத நாட்டிய அரங்கேற்றம் ஸ்ரீதேவி நிருத்யால யாவில் சமீபத்தில் நடைபெற்றது.

வெறும் பாரத நாட்டியமாக மட்டுமல்லாமல் நடனம் ஆடிக் கொண்டே அங்கிருந்த ஓவிய பலகையில் நரசிம்ம மற்றும் வராக அவதார தோற்றங்களுடன் கூடிய விஷ்ணுவின் முழு உருவத்தையும் அழகான ஓவியமாக வரைந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நான்கு வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த மேக்னா உன்னிகிருஷ்ணனுக்கு இதுநாள் வரை பக்கபலமாக இருந்து இந்த சாதனையை செய்வதற்கு அவரது அம்மா மஞ்சு உன்னி கிருஷ்ணன் மற்றும் பரத நாட்டியத்துடன் ஓவியத்திலும் பயிற்சி அளித்த  ஷீலா உன்னி கிருஷ்ணன் ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.

தான் பரதம் கற்ற ஸ்ரீதேவி நிருத்யாலாயாவில் தற்போது பயிற்சி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார் மேக்னா. அங்கே நடைபெற்ற 63வது அரங்கேற்றமாக மேக்னாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

Related posts

அதிக திரைகள் பெறும் கன்னட ப்ளாக்பஸ்டர் ‘காந்தாரா’

Jai Chandran

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிறந்த நாளில் திரையுலகினர், அமைச்சர் வாழ்த்து

Jai Chandran

கடாட்சம் பட போஸ்டர் வெளியிட்ட சுரேஷ் காமாட்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend