நமக்கு நாமே சிறப்பு விருந்தினர்களாக, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த பத்திரிகையாளர்கள்
முழு முதல் கடவுள் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு விநாயகருக்கு உகந்த பொருட்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் வழங்கினோம்.
திரை பிரபலம் ஒருவர் கொழுக்கட்டை மாவு ,மற்றும் வெல்லம் வழங்கியும், சங்க தலைவர் கவிதா, மற்றும் உறுப்பினர் ராஜீவ்காந்தி ஆகிய இருவரும் கொண்டை கடலை வழங்கியும். விநாயகர் புகைப்படம் ராயல் பிரபாகர், இத்தனை பொருட்களையும் எடுத்துச் செல்லும் வகையில், அழகிய வடிவமைப்பு செய்த துணிப்பையை உறுப்பினர் நாற்காலி செய்தி கார்த்தி ஆகியோர் தாமாக விருப்ப பட்டு செய்து கொடுத்தனர்.



இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக எந்த ஒரு விழாவிற்கும் சிறப்பு அழைப்பாளர்கள் வர வைத்து சிறப்பிக்கும் நாங்கள்.. இந்த நிகழ்விற்கு உறுப்பினர்களையே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு ஒரு உறுப்பினர் மற்ற உறுப்பினர்களுக்கு பொருட்களை வழங்கி சிறப்பித்தனர். எல்லா வற்றிலும் முன் உதாரணமாக திகழும் எமது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும். அனைத்து மக்களுக்கும் விநாயகர் சதுர்த்தி நாளில் வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொண்டனர்.
