டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா பைன் ஆர்ட்ஸ், டாக்டர், கலைமாமணி நெல்லை சுந்தர்ராஜனின் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து நடத்திய பெரிய திரை, சின்ன திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா குமரன் காலனி வடபழனி சிகரம் ஹாலில் நடந்தது.
யூனிவர்சிட்டி சான்சலர் மது கிருஷ்ணா தலைமைஏற்று சின்னத்திரை, பெரிய திரை கலைஞர்களான ரோஹித் பாலையா, கண்ணன் ( சந்திரலேகா ) யமுனா (ஹிட்லர் ) பிரபல இசையமைப்பாளர், பாடகி ரெஹானா, பிரபல நடன ஆசிரியர், இயக்குனர் ராதிகா ( பிரபல நடிகை அமரர் சீதாலட்சுமி மகளாவார் )”சுந்தரி ” சீரியல் கோபி ஆகியோருக்கு விருது வழங்கி வாழ்த்தினார்.
அருகில் மஹா டாக்டர் அனுராதா ஜெயராமன், யுனைடெட் கலைமாமணி நெல்லை சுந்தரராஜன், ஸ்போட்ஸ் சாம்பியன், வக்கீல் சௌந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

