நீட் தேர்வு உள்ளிட்ட சில தேர்வுகளில் தேர்ச்சி அடைய மாட்டோமோ என்ற எண்ணத்தில் சில மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வேதனையில் ஆழ்த்துகிறது.
மாணவ, மாணவிகளுக்கு சூர்யா உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வாழ்க்கையில் சாதிக்க முற்படுங்கள் என தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ மெசேஜ் வைரலாகி வருகிறது:
