Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மலேசிய அமைச்சருடன் பேசிய கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் தகமல் ஹாசன்  மலேசிய மனிதவள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின்  தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுடன் இணைய வழி நேரலையில் உரையாடினார்.

கொரோனா பெருந்தொற்றால் மலேசியாவில் வாழும் தமிழர்கள் சந்தித்து  வரும் நெருக்கடிகள் பற்றி விவாதித்தார்.

கலந்துரையாடலில் அவர்களுக் கான உடனடி தேவைகள், மலேசியாவில் வாழும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் இருக்கும் சிக்கல்கள், தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தைச் சீரமைக்க தமிழக, இந்திய அரசுகளின்  சார்பில் செய்ய வேண்டியவைகள் ஆகியவற்றைப் பற்றி உரையாடினார்கள்.

மலேசியாவிற்கு முறையான அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மூலம் வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எதிர் கொள்ளும் சிரமங்களைத் தடுக்க, தமிழக அரசு மலேசியாவில் நம்பத்தகுந்த நிறுவனம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் வேலைவாய்ப்புகளின் உண்மைத்  தன்மையை உறுதி செய்தபின், தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை அனுமதிக்கலாம் என்று  எம்.சரவணன் அவர்களின் ஆலோசனையை தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக தலைவர். திரு. கமல் ஹாசன் அவர்கள் தெரிவித்தார்.

மலேசியாவில் பணி செய்து கொண்டிருக்கும் 67,395 தமிழர்களின் நலனுக்காக மனிதவள அமைச்சர் எம்.சரவணன் முன்வைத்த கோரிக்கைகள், பரிந்துரைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசிடமும் தெரிவிப்பதாக தலைவர். திரு. கமல் ஹாசன் அவர்கள் உறுதியளித்தார்.

Related posts

நாய் சேகர் (பட விமர்சனம்)

Jai Chandran

தமிழன் பிரதமர் ஆக வேண்டும்: கமல் பரபரப்பு பேச்சு

Jai Chandran

பிரஜினின்  அரசியல் த்ரில்லர் ‘சேவகர்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend