மத்திய அரசு விளக்கம்.
புதுடெல்லி, மார்ச்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் நிலை யில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 1,251 ஆகியிருக்கிறது.
நான்கு கட்டங்களை கொண்டது கொரோனா வைரஸ். தற்போது இந்தியா வில் கொரோனா பரவல் 3-வது நிலையாக மாறியி ருப்பதாக பேசப்பட்டது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. கொரோனா பரவல் சமூக பரிமாற்றத் திற்கு இன்னும் செல்ல வில்லை. உள்ளூர் பரிமாற்ற அளவில்தான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் 3வது கட்டம் என்பது, கொரோனா பாதிப்பு தனக்கு இருக்கிறது என்பது அவருக்கே தெரியாது. அவருடன் பழகுபவருக்கும் கொரோனா வை பரப்பி விடுவார். 4வது கட்டம் அபாயகரமானது. இத்தருணத்தில் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் கொரோனா பரவியிருக்கும். சமூகமாக விலகியிருத்தல் முறையை மக்கள் உரிய முறையில் பின்பற்றினால், கொரோனா தடுத்து நிறுத்த் முடியும் என்று மருத்துவ வல்லுனர் கள் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில்தான் தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக் கிறது
#Corona Not Reached Third Level In India – Cetral Govr. Reports