சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சூட்டிங் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தமிழக அரசு தடை விதித்த பிறகும், தொடர்ந்து சூட்டிங் நடந்து வந்தது. இந்த சூட்டிங்கில் 150 பேர் கலந்து கொண்டு இடைவிடாது சூட்டிங் நடத்தி வந்தனர். அதில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனாலும் சூட்டிங் நிறுத்தப்பட வில்லை.
இது குறித்து தகவல் கிடைத்ததும், பூந்தமல்லி தாசில்தார், உதவி கமிஷனர் சுதர்சனம் ஆகியோர் பிலிம் சிட்டிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் ஷுட்டிங்கிற்கு தடை விதித்து ஸ்டூடியோ தளத்துக்கு சீல் வைத்தனர்
previous post