Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஊழல் இரட்டை வேடம்: பிரதமர் மோடிக்கு கமல் கட்சி கேள்வி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டு ள்ள அறிக்கையில்,”ஊழல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘‘ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. இதற்கு மக்கள் என்னோடு துணைநிற்க வேண்டும்” என்று சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அவர்கள் ஊழல் எதிர்ப்பு உரையாற்றினார். ஆனால், பாஜக ஆளும் கர்நாடகத்தின் “ஊழல் குரல்” ஏனோ பிரதமர் மற்றும் பாஜகவின் காதில் விழ மறுக்கிறது?

ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு 40% கமிஷன் தராமல் நாங்கள் செய்த வேலைகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என்று கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர்(KSCA), தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுகுறித்து, இச்சங்கத்தினர் கடந்த ஆண்டே பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில், இப்போது மீண்டும் இப்பிரச்னையை வெடித்துள்ளது.

கல்வித்துறையிலும் ஊழல் கரைபுரண்டோடுகிறது என்கிறது RUPSA என்ற கர்நாடக தனியார் பள்ளிகளின் சங்கம் (Registered Unaided Private Schools Management Association (RUPSA)) . பள்ளிச்சான்று புதுப்பிப்பதில் தொடங்கி இலஞ்சம் தராமல் பள்ளிக்கல்வித்துறையில் எந்த வேலையும் நடப்பதில்லை என்று கல்வித்துறை அமைச்சர் B.C.நாகேஷ் மீது குற்றம்சாட்டி 13000 பள்ளிகளை உள்ளடக்கிய RUPSA சங்கம், பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளது(கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் வெளிப்படையாக கமிஷன் கேட்கும் ஆடியோவோடு).

தேசத்தின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக இருக்கிறது என்று டெல்லியில் முழக்கமிடுகிறார் பிரதமர் மோடி. ஆனால், ஊழல் விவகாரம் காரணமாக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய எதியூரப்பாவைக் கர்நாடகாவில் மீண்டும் முதலமைச்சாராக்கியதில் தொடங்கி, இன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை மீது எழுந்துள்ள வெளிப்படையான ஊழல் குற்றச்சாட்டுகளை வேடிக்கை பார்ப்பதுவரையிலான நடவடிக்கைகள் ஊழல் குறித்து பாஜகவின் இரட்டைவேடத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

பிரதமர் அவர்களே, ஊழல் ஒழிப்பு உபதேசம் என்பது சுதந்திரதின உரைக்கு மட்டும்தானா? செயல்பாட்டுக்குக் கிடையாதா? ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மாற்றுக்கட்சியினர் மீதுமட்டும்தானா? சொந்தக்கட்சியினர் மீது கிடையாதா..?

இது மக்கள் நீதி மய்யத்தின் கேள்வி மட்டுமல்ல.. ஊழல் தேசத்தை அழிக்கும் புற்றுநோய் என்ற எண்ணமுள்ள ஒட்டுமொத்த இந்தியர்களின் கேள்வியாகும்.

பிரதமர் மோடி, பாஜகவின் பதிலென்ன.?

-இவ்வாறு செந்தில் ஆறுமுகம், கூறியுள்ளார்.

Related posts

ரயில் என்ஜின்களை அலங்கரிக்கும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ

Jai Chandran

SoorpanagaiTrailer On 14th Sept

Jai Chandran

பவுடர் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend