ஒரு சட்ட கல்லூரி மாணவியின் தீர்க்கமான போராட்டம் ஈகை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறது
இப்படம் பற்றி இயக்குனர் அசோக் வேலாயுதம் கூறியதாவது:
பிற மொழி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.
மும்பை , ஹைதராபாத் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் ஈகை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் , இறுதி கட்ட படப்பிடிப்பு இப்பொழுது துவங்கி உள்ளது .
இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் பிளாஷ் பேக் மற்றும் கிளைமாக்ஸ் இயக்கியதுடன் படப்பிடிப்பு நடக்கிறது. .
இதில் மார்க் எனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரோஷன் கனகராஜ் அறிமுகமாகிறார். இந்த மார்க் பாத்திரம் – புஷ்பா பட வில்லன் சுனிலுடன் சார்ந்த கதையில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாய் திருப்பு முனையாய் இருக்கும்.
மேலும் அருவி பாலா-, ரூபினி மற்றும் 25 புதிய முகங்களை முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகிறார்கள்
நாயகி அஞ்சலி நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப் , சுனில், அர்ஜய், பொன்வன்னன், ஹரிஷ் பேரடி , அபிராமி , தீபா , புகழ் போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள் .
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஏற்கனவே முன் மயக்கம் என்ன , பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் ஒளிப் பதிவாளராக பணியாற்றி உள்ளார்
விடாமுயற்சி , சரோஜா , ஆரண்யா காண்டம் போன்ற படங்களில் பணியாற்றிய, தேசிய விருது பெற்ற என் பி. ஸ்ரீகாந்த் எடிட்டிங் கவனிக்கிறார்.
காலா , கபாலி , சார்பாட்ட பரம்பரை, கேப்டன் மில்லர் போன்ற படங்களின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார் வசனம்: பரதன்.
இசை : தரன் குமார் – ஸ்டண்ட் மாஸ்டர்: சிறுத்தை கணேஷ் – பாடல் வரிகள் : கார்த்திக்.
தயாரிப்பு :கிருஷ்ணமச்சாரிய ராமபத்திரன், பிருந்தா கிருஷ்ணா க்ரியேஷன்ஸ்
சமுக நீதி – அரசியல் பகுத்தறிவு, பொருளாதாரம் இந்த மூன்றும்தான் ஒரு மனிதனை மேன்மைபடுத்தும் அதை ஈகை பேசுகிறது.