Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து வாழ முடிவு

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி பிரிந்துவாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.

தனுஷ், ரஜினாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா காதலித்து, இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருனணம் செய்துக்கொண்டனர். கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்து தனது இணைய தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.

இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்”
இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.

Related posts

Dragon Ball Super will be dubbed in Hindi

Jai Chandran

அமெரிக்காவில் நடந்த ராம் சரணின் “கேம்சேஞ்சர்” பட விழா

Jai Chandran

Sabhaapathy Trailer hits 3M+ views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend