கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பியவருக்கு ராஜ்கிரண் கண்டனம்..
தினமும் காலையில் எழுந்தவுடன் பக்தி மயமாக ஒலிக்கும் கந்தசஷ்டி கவசம் பற்றி நெட்டில் சிலர் அவதூறு பரப்பி வீடியோ வெளியிட் டுள்ளனர். அவ தூறு பரப்பியவர்களு க்கு நடிகர் ராஜ்கிரண் அவதூறு பரப்புபவர்களுக்கு கண்டனம் தெரிவித்திருக் கிறார்.
அவரது அறிகையில் கூறியிருப் பதாவது:
ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவர்களது சுதந்திரம். முருகப்பெருமானை நம்பு வோர்க்கு,”கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
“ஒரு பாதுகாப்பு அரண்”. இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்து வரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின் றன. இறைவனை நம்பா தோர்க்கு,”நம்பாமை” என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு,”நம்புதல்” என்பது, அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மை யானது.தேவையில்லாமல் மற்றவர் எல்லைக் குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது…
இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத் தோடும், பொருளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள்
தவித்துக்கொண்டிருக்கும்சூழலில்,இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டு வதில், யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்கத்தோன்று கிறது.
இவ்வாறு ராஜ்கிரண் கூறி உள்ளார்.
’பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப் பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாத்தீகம் என்ற பெயரில் பிறர் வழிபாட்டு நம்பிக்கையை இழிவாக பேசுவதால் துவேஷம் பெறுமேயன்றி வேறு எதுவும் நிகழாது. ஓம் சரவணபவ’ என கூறி உள்ளார் சவுந்திரராஜா.