சென்னை உள்பட 5 மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு..
4.நாட்கள் கடும் கட்டுப்பாடு
சென்னை ஏப் :
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஏற்கெனவே இந்தியா முழுவதும் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திடீரென்று தமிழக அரசு அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக் கிறது.
குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை மாநகராட்சி பகுதிகளில்
26ம் தேதி (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 29ம் தேதி (புதன்கிழமை )இரவு 9 மணி வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் 26ம் தேதி (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 28 (செவ்வாய் கிழமை) இரவு 9 மணிவரையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
5 மாநகரட்சியில் மட்டும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதே முழு அடைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
#complete lockdown in 5 major சிட்டிஸ் in Tamil Nadu