சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக் அப்பீல் நாளை விசாரணை..
புதுடெல்லி, மே
கோரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு கட்டுப்பாடு கள் விதித்து அதை பின்பற்றி திறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதன்படி மதுக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நாளில் ரூ 150 கோடிக்கு மேல் விற்பனை யானது. ஆனால் மறுநாள் கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாக டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆன் லைன் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பபட்டது. இதன் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
#Coronavirus lockdown: SC may hear Tasmac’s appeal on May 15
