ரஜினிபோல் தவறான தகவலால் அமிதாப் டிவிட்டர் மெசேஜ் நீக்கம்..
கொரோனா வைரஸ் பற்றிஇந்தியா முழுவதும் உள்ள பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட டிவிட்டர் மெசேஜில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3வது கட்டத்திலிருக்கிறது எனவே மிகுந்த கவனமாக இருக்க கேட்டிருந்தார். அவரது இந்த மெசேஜில் டிவிட்டர் பாலிசிக்கு விரோதமாக இருப்பதாக கூறி டிவிட்டர் நிர்வாகமே ரஜினியின் டிவிட்டர் மெசேஜை நீக்கியது நீக்கியது.
அதேபோல் பாலிவுட் சநடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் பகிர்ந்த ஒரு மெசேஜ் பகிர்ந்தார்.. அது பற்றி விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அமிதாப் உடனடியாக அந்த மெசேஜை நீக்கினார்.
அந்த மெசேஜில்,
“22 மார்ச் அமாவாசை, இந்த மாதத்தின் இருட்டான நாள். வைரஸ், பாக்டீரியா போன்ற தீய சக்திகள், சக்தி வாய்ந்தவையாக இருக்கும். கைதட்டுவதால் அவற்றின் சக்தி குறையும். நிலா, ரேவதி நட்சத்திரம் வழியாகக் கடக்கும். ஒட்டு மொத்த அதிர்வும் ரத்த ஓட்டத் திற்கு நல்லது’ என்று மூட நம்பிக்கையை பரப்பும் வகையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால்
மார்ச் 22ம் தேதி அமாவாசையே இல்லை. அதற்கு முன்பே அமாவாசை முடிந்து விடுகிறது, கைதட்டுவதால் வைரஸின் பவர் குறையும் என்று சொல்வதெல் லாம் உண்மையில்லை. ‘வாட்ஸ் அப் ஃபார்வேர்டு மெசேஜை அப்படியே எடுத்துப்போட்டது போல் இருக்கிறது என விமர் சனம் எழுந்தது.
அதனைக் கண்டதும் உடனடியாக அந்த டுவீட்டை அமிதாப் நீக்கினார்.
#’Misinformation on Coronavirus Spread’: Twitter Deletes Rajinikanth’s Post
#Amitabh Bachchan Slammed for Tweeting Fake WhatsApp Forw
#Super star Rajinikhanth