Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய விருது பெற்றவர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

தேசிய விருது வென்ற தமிழ் நடிகர், நடிகை தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்து. இதுகுறித்து சங்கம் வெளியிட்ட அறிக்கை:

இந்திய அரசின் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு இன்று பன்மொழி சார்ந்த ஒட்டுமொத்த திரையுலகமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது. விருது பெற்ற ஒவ்வொரு திறமைக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் திரைத்துறையை சார்ந்த நடிகர் எம். எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பார்க்கிங் படத்துக்காக, திரு.ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாத்தி படத்துக்காக, நடிகை திருமதி. ஊர்வசி சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது உள்ளொழுக்கு – மலையாள படத்திற்க்காவும், வென்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம் இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஊர்வசி அவர்களும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களும் நடிப்பின் இலக்கணமாகவே மாறி விட்டனர்.
நடிகை ஊர்வசி மற்றும் திரு.ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது தேசிய விருது.
தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள மூவருமே தமிழ் திரையுலகில் தனி இடம் பெற்றவர்கள்.
இவர்களுக்கும், தமிழ் திரைத்துறைக்கு இந்த ஆண்டு 3 தேசிய விருதுகளை பெற்றுத் தந்த பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவுக்கும், இந்த விருதுகளை கொண்டு சேர்த்த அனைவருக்கும் உள்ளார்ந்து வாழ்த்துகிறது.
குறிப்பாக நடிப்பிற்காக விருது பெற்ற அனைவருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இவ்வாறு  தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கையில் கூறியுள்ளது.

Related posts

EtharkkumThunindhavan Shooting wrapped up

Jai Chandran

RRRMovie TRAILER out on DEC 3rd..

Jai Chandran

டங்கி படத்தின் முதல் பாடல் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend