Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தியேட்டர்கள் திறக்க அனுமதி: பாரதிராஜா அறிக்கை

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர்
மு.க. ஸ்டாலினுக்கு எங்கள் நன்றிகள்

கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரானா.  படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது.

நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் 50% இருக்கை களோடு திறந்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.

ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம்.

திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளகள் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்

Related posts

மதுரை வந்தால் தானாக மீசை முறுக்குகிறது: “கோப்ரா ” விழாவில் விக்ரம் பேச்சு

Jai Chandran

துபாயில் வெற்றி பெற்ற மாற்று திறனாளிகள் கமலுடன் சந்திப்பு..

Jai Chandran

சாதுவான சட்டகல்லுரி மாணவனின் வாழ்க்கை போராட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend