Trending Cinemas Now
விமர்சனம்

ராஜாவுக்கு செக் (பட விமர்சனம்)

படம்: ராஜாவுக்குசெக்
நடிப்பு: சேரன், இர்பான், சிருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா, சராயு
தயாரிப்பு: சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட்
இசை:வினோத் எஜமான்யா
ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு
இயக்கம்: சாய் ராஜ்குமார்

போலீஸ் அதிகாரி சேரனுக்கு திடீரென தூங்கி விடும் வித்தியாசமான நோய் தாக்குகிறது. அப்படி தூங்கினால் நாள், வாரம், மாதக்கணக் கில்கூட தூங்கிக்கொண்டே இருப்பார். இதனால் அவரது மனைவி விவகாரத்து கேட்டு கோர்ட்டில் மனு செய்கிறார். 10 வருடமாக விசாரணை நடந்தும் சேரன் விவாகரத்து தர மறுக்கிறார். தனது மகள் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று மனைவி கேட்டுக்கொண்டதையடுத்து நிபந்தனையுடன் விவாகரத்து தர சம்மதிக்கி றார். வெளிநாடு செல்வதற்கு முன் 10 நாள் மகளை நான்தான் பார்த்துக்கொள்வேன் என்று கேட்கிறார். அதற்கு மனைவி சம்மதிக்கிறார். மகளை வீட்டுக்கு அழைத்து வரும் சேரன் அவருக்கு என்னென்ன விருப்பமோ அதை நிறைவேற்றுகிறார். மறுநாள் வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில் மகள் காணாமல் போகிறார். வீட்டிலிருக்கும் பென்டிரவ்வை டிவியில் போட்டு பார்க்கும்போது சில இளைஞர்கள் அவரை கடத்தியது தெரியவரு கிறது. மகளை மானப்பங்கப்படுத்தப்போவ தாக அந்த கும்பல் வீடியோவில் மிரட்டுகிறது. அவர்களிடமிருந்து மகளை சேரன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை த்ரில்லாக சொல் கிறது கிளைமாக்ஸ்.
குடும்பம், காதல், நட்பு என்று சேரனின் வழக்கமான பார்முளா படமாக இருக்குமோ என்ற யோசனையுடன் தியேட்டருக்கு சென் றால் ஒரு சில காட்சிகள் நகர்ந்தவுடன் படத்தில் தொற்றிக்கொள்ளும் விறுவிறுப்பு கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது. ரசிகர் களுக்கு மட்டுமல்ல சேரனுக்கும் இந்த கதை முற்றிலும் புதிய அனுபவம்.
குடும்பம் பிரிந்ததில் குடியும் புகையுமாக காலத்தை கழிக்கும் சேரனுக்கு திடீரென தூங்கிவிடும் நோய் இருப்பதை சொன்னதும் தூக்கம்தானே என்று நினைத்தால் அதனால் என்னென்ன ஆபத்து என்பதை ஒரு சேம்ப்பள் காட்சிகள் காட்டி அதிர வைக்கிறார் இயக்கு னர். மகள் நந்தனா வர்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து அவரிடம் மனம்விட்டு பேசி கொஞ்சி மகிழும் சேரன் அவரை சுற்றுலா வுக்கு ஜீப்பில் அழைத்துச் செல்லும்போது எங்கே ஜீப்பை டிரைவிங் செய்துகொண் டிருக்கும்போதே தூக்க நோய் தாக்கி விபத்தை ஏற்படுத்திவிடுவாரா என்று படபடப்பு அதிகரிக்கிறது.
மகளுக்கு பிறந்த நாள் கொண்டாட வீட்டுக்கு வரும் சேரன் வீட்டில் அவர் இல்லாதது தெரிந்ததும் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. அதன்பிறகு எல்லா காட்சிகளும் றெக்கை கட்டிக்கொள்கிறது. வீடியோவை நிறுத்தாமல் பார்க்கச்சொல்லி எங்கிருந்தோ மிரட்டும் இர்பான், நந்தனாவை என்ன செய்வாரோ என்ற இதயத்தின் லப் டப் நிமிடத்துக்கு நிமிடம் எகிறுகிறது. அவருக்கு போதை பொருள் கொடுத்து அவரிடம் சிலுமிசத்தை தொடங்குவது பின்னர் அவரை வேறு இடத்துக்கு கடத்தி செல்வது எல்லாமே எதிர்பாராத திருப்பங்கள்.

தன் கண்ணெதிரிலேயே மகள் நந்தனாவை இர்பான் படுத்தும் பாடுகளை கண்டு ஒரு தந்தையாக சேரன் தவிக்கும் தவிப்பு காட்சி களுக்கு உயிர் கொடுக்கிறது. மகளை காணாமல் தவிப்பதும், நிலை கொள்ள முடியாமல் கதறுவதும் பின்னர் தந்திரமாக போலீசாருக்கு தகவல்கொடுத்து இர்பான் கூட்டத்தை மடக்கி பிடிப்பதுமாக அதிக வேக செயல்பாடுகளில் ஆச்சர்யப்படுத்துகிறார் சேரன்.
சிருஷ்டி டாங்கே கூடுதல் இணைப்பு. கதையின் திருப்பத்துக்கு பயன்பட்டிருக்கிறார்.
கதையின் ஒன்லைன் கேட்டால் இவ்வளவு தானா என்றிருக்கும் ஆனால் அதற்கான திரைக் கதையை கேட்டால் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர் சாய் ராஜ்குமார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத் என்கவுன்ட் டரை ஞபாகப்படுத்துகிறது.
இசை, ஒளிப்பதிவு எல்லாமே அளவுக்கு மிகாமல்கட்டுக்குள் இருப்பதால் கதையை தெளிவாக சொல்லமுடிந்திருக்கிறது.
ராஜாவுக்கு செக்-அதிர்வை ஏற்படுத்தும்.

Related posts

காடப்புறா கலைக்குழு (பட விமர்சனம்)

Jai Chandran

ரெய்டு (பட விமர்சனம்)

Jai Chandran

ஆடு ஜீவிதம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend