தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் ஆகவில்லை..
சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று (ஏப் 3) அளித்த பேட்டி :
தமிழகத்தில் 102 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
இதில் 100 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இனொருவர் அமெரிக்கா சென்று வந்தவர். மற்றொருவர் யார் என்ற விசாரணை நடக்கிறது. தமிழகத்தில் 309 ஆக இருந்த கொரோனா தொற்று இதன்முலம் 411 ஆக அதிகரித்திருக்கிறது
டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு வந்தவர் களில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கரோனா பரவல் நிலையில் 2 ஆம் கட்டத்தில்தான் உள்ளது. இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்ட வில்லை. பரவலைத் தடுக்க சோசியல்டிஷ்டன்ஸை மக்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு பீலா ராஜேஷ் கூறினார்.
#Corona in Tamil Nadu only 2nd Stage : Beela Suresh
#கொரோனா தமிழகத்தில் 2ம் நிலையில் உள்ளது : பீலா ராஜேஷ்
