இத்தாலி பயங்கரம் : 100 டாக்டர்கள் பலி..
கொன்று குவிக்கும் கொரோனா..
சீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சர்வ தேச அளவில் இதுவரை 16 லட்சத்து 5 ஆயிரத்து 277 பேர் பாதிக்கப்பட்டிருக்கின் றனர். 95,751 பேர் உயிரிழந் திருக்கின்றனர்.
கொரோனா பாதிப்பிலி ருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 925 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப் பில் அதிகம் பலியான நாடு களில் இத்தாலிதான் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் இத்தாலியில் இதுவரை 14 லட்சத்து 36 ஆயிரத்து 626 பேர் கொரோ னவால் பாதிக்கப்பட்டிருக் கின்றனர்.18,279 பேர் கொரோனா வுக்கு பலியாகி உள்ளனர்.
சிகிச்சைக்கு பிறகு தொற்று பாதிப்பி லிருந்து 28 ஆயிரத்து 470 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.
இதெல்லாவற்ரையும்விட கொரோனா தொற்றுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை 100 டாக்டர்கள் பலியாகி இருக்கின்றனர். இதில் ஓய்வுபெற்ற டாக்டர்களும் அடங்கு வர்கள்.30 நர்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவி பணியாளர்களும் பலியாகி உள்ளனர்.
இந்த தகவலை இத்தாலியின் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
#One hundred Italian doctors have died of coronavirus